districts

img

சுதந்திரப் போராட்ட வீரர் பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் சிலைக்கு மரியாதை

மதுரை, ஜூன் 5-  சுதந்திரப் போராட்ட வீரர் பாரிஸ் டர் ஜார்ஜ் ஜோசப் 135 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழுவின் மதுரை மாநகர் மற்றும் மதுரை பல்  சமய உரையாடல் குழு சார்பில் ஞாயிறன்று யானைக்கல் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு மாலை  அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.  இந்நிகழ்ச்சிக்கு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலா ளர் கே.அலாவுதீன் தலைமை வகித்  தார். மாவட்ட பொருளாளர் எம்.  ஜான்சன் முன்னிலை வகித்தார்.மதுரை மாநகர துணை மேயர் டி. நாகராஜன், மதுரை உயர்மறை மாவட்ட முதன்மை குரு அருட்தந்தை ஜெ.ஆர். ஜெரோம் எரோணிமோஸ்,  பல்சமய உரையாடல் குழு செயலா ளர் அருட்தந்தை ஜே.பெனடிக்ட் பர்னபாஸ், சமயநல்லூர் பங்குத் தந்தை அருட்தந்தை பால் பிரிட்டோ, கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை  எஸ்.லாரன்ஸ் மற்றும் ஆந்திர மாநில பிரமலை கள்ளர் சங்க நிர்வாகிகள், பெருங்காமநல்லூர் வீர மங்கை மாயக்காள் மகளிர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.