மதுரை, செப்.10- மதுரை டவுன் ஹால் ரோடு- மேற்குவெளி வீதி சந்திப்பில் உள்ள இந்த பெரிய பள்ளம், அருகிலுள்ள கழிவுநீர் செல்லும் தொட்டி நிரம்பி வழியும் போதெல் லாம் கழிவுநீரில் தான் மக் கள் நடந்து செல்ல வேண்டி யுள்ளது. மதுரை மாநகர் போக்கு வரத்துக் காவலர்கள், மதுரை ரயில்வே சந்திப்புக்கு எதிரே உள்ள மேற்குவெளி வெளி வீதியின் ஒரு பகுதியில் ஒரு வழிப் போக்குவரத்தை அறி முகப்படுத்தி யதையடுத்து, மாநகர் பேருந்துகள் உள் ளிட்ட வாகனங்கள் மேற்கு வெளிவீதி வழியாக கடந்து ஒன்பது மாதங்களாகச் சென்று வருகின்றன. இருப்பினும், மேற்கு வெளி வீதியில் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடையோ பேருந்துகள் தடையின்றி செல்வதற்கோ போதுமான செய்துதரப்படவில்லை. மேற்குவெளி வீதி சாலை யில் பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும் குழியு மாகத்தான் உள்ளது. சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்து வது, திடீர் திடீரென நிரம்பி வழியும் கழிவு நீர் பாதசாரி களை எரிச்சல் அடையச் செய்கிறது. குறைந்தது வாரத்தில் மூன்று நாட்களாவது, டவுன் ஹால் ரோடு சந்திப்புக்கு அருகில் உள்ள பாதாளச் சாக்கடை தொட்டி நிரம்பி வழிகிறது. இதனால், பள் ளங்களில் கழிவுநீர் தேங்கி பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது’ என்கின்ற னர் குடியிருப்பு வாசிகள். இந்தச் சாலையில் ஒரு பெரிய பள்ளம் உள்ளதைக் கற்களை வைத்து அடையா ளம் காட்டியுள்ளனர் மக் கள். இந்த இடத்தில் கார்கள் மற்றும் இரு சக்கர வாக னங்கள் மெதுவாகச் செல்வ தால் போக்குவரத்து நெரி சல் ஏற்படுகிறது. பல்வேறு நேரங்களில், வேகமாக வரும் இரு சக்கர வாகனங்கள், பாத சாரிகள் மீது அசுத்த நீரை அள்ளித் தெளித்துச் செல் கின்றனர். குறைந்தது ஒரு நாள் முழுவதும் நிரம்பி வழியும் கழிவு நீரை மறு நாள் அகற்று வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது மதுரை மாநகராட்சி. ஆனால், அடுத்த ஓரிரு நாட்களில் கழிவுநீர் மீண்டும் பெருக்கெடுத்து ஓடும் என்கின்றனர் இந்தப் பிரச்சனையை அடிக்கடி சந்திக்கும் மக்கள். ஸ்மார்ட் சிட்டி. கோவில் மாநகரம், தூங்காநகரம் என்ற பெயர் பெற்ற மது ரையின் இதயப்பகுதியான டவுன்ஹால் ரோட்டில் தான் இந்த நிலை.