நத்தம், ஜூலை 6- திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2022 தொடரின் ஜூலை 5 செவ்வாய்க்கிழமையன்று நடை பெற்ற போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் சீகம் மதுரை பேந்தர்ஸ் அணியை வீழ்த்தியது, தொடர்ச்சியாக தங்களின் 4வது வெற்றியை நெல்லை அணி பதிவு செய்தது. அதோடு இந்ததொடரில் தங்களின் முதல் தோல்வி யை மதுரை சந்தித்தது. முதல் இன்னிங்ஸில் நெல்லை அணி நிர்ணயித்த கடின இலக்கை நோக்கி களமி றங்கிய சீகம் மதுரை பேந்தர்ஸ் அணிக்கு நெல்லையின் அறிமுக வீரர் கே.ஈஸ்வரன் மிகப்பெரிய அதிர்ச்சியளித்தார். டி.என்.பி.எல் வரலாற்றில் அறிமுகப் போட்டியின் முதல் பந்தில் விக்கெட் வீழ்த் திய ஆறாவது வீரர் என்ற சாதனையைப் புரிந்ததோடு அனுபவ வீரர் அனிருத் (1 ரன்) மற்றும் ஆதித்யாவிற்கு பதிலாக மாற்று வீரராக களமிறங்கிய ராஜ்குமார் (4 ரன்கள்) விக்கெட்களை கைப்பற்றி அசத்தலான அறிமுகத்தை இந்தப் போட்டி யில் ஏற்படுத்தினார். இறுதியில் இந்த தொடரில் தங்களின் முதல் தோல்வியை சீகம் மதுரை பேந்தர்ஸ் 26 ரன்கள் வித்தியாசத்தில் சந்திக்க, நெல்லை ராயல் கிங்ஸின் வெற்றிப் பயணம் 4வது வெற்றியுடன் தொடர்ந்து நீடிக்கிறது.