districts

img

மலைக்குகையில் வசித்த பழங்குடியின மக்கள் தொகுப்பு வீடுகளில் குடியேறினர்

கடமலைக்குண்டு, ஆக.27- தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு பகுதியில் பழங்குடி யின மக்களுக்காக அரசு தொகுப்பு வீடு களை கட்டி கொடுத்துள்ளது. இந்த வீடுகளில் குடியிருந்த 5 குடும்பங்களை அதே காலனியில் வசித்த மற்ற பழங்குடி யினர், நீங்கள் அனைவரும் தெற்கு மலை யை சேர்ந்தவர்கள், அதனால் நீங்கள் இங்கு  தங்க கூடாது என்று கூறி விரட்டியடித்தனர்.  இதனால் 5 குடும்பங்களை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள்  கடமலைக்குண்டு திருவூத்து கரடு பகுதி யில் மலைக்குகையில், வனவிலங்குகள் அச்சத்துடனும் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாமலும், உணவு இல்லா மலும் வசித்து வந்தனர். இது தொடர்பாக  பழங்குடியின மக்கள் மாவட்ட அதிகாரி களுக்கு கோரிக்கை விடுத்தனர்.  இதனையடுத்து பழங்குடியின மக்கள்  வசிக்கும் மலைப்பகுதிக்கு வந்த தேனி மாவட்ட துணை ஆட்சியர் முத்துமாதவன், ஆண்டிப்பட்டி வட்டாட்சியர் காதர்ஷெரிப் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள், இரண்டு தரப்பு மக்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.  பேச்சுவார்த்தையின் முடிவில் 5 குடும்பங்களை சேர்ந்தவர்களை, பழங்குடி யினர் தொகுப்புவீடுகள் காலனிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரவருக்கு  ஒதுக்கப்பட்ட வீடுகளில் தங்க வைக்கப் பட்டனர்.  மேலும் அந்த காலனி அமைந்தி ருக்கும் பகுதியில் பழங்குடியினர் பாது காப்பை உறுதி செய்யும் வகையில் காவல்  துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடு படவும் உத்தரவிட்டனர். இதுதவிர பழங்குடி யின மக்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதனால் வீடுகளை  விட்டு மலைக்குகையில் தங்கியிருந்த பழங்  குடியின மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.