districts

img

பட்டா கேட்டு மனுக் கொடுக்கும் போராட்டம்

சிவகாசி, ஜூலை 5- சிவகாசியில் இலவச வீட்டு மனைப் பட்டா கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் மனுக் கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு முனீஸ்  வரன் காலனி பெண்கள் கிளைச் செய லாளர் முனீஸ்வரி தலைமையேற்றார். நகரச் செயலாளர் ஆர்.சுரேஷ்குமார் துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு  உறுப்பினர் பி.என்.தேவா விளக்கவுரை யாற்றினார். மேலும் இதில், பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்க நிர்வாகி முரு கன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

;