districts

img

சீரழிந்து கிடக்கும் அரசு உப்பு நிறுவனம்

இராமநாதபுரம், மார்ச் 22- இராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில் இயங்குகிற தமிழ்நாடு அரசு உப்பு நிறுவன நிர்வாகம் சீரழிந்து கிடப்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு, ஒரே ஒரு வார்த்தையில் முடிய வேண்டிய வேலை நிறுத்தம் இரண்டாவது நாளாக தொடர்ந்து கொண்டு இருக்கிறது. உப்பு நிறுவனத்தின் வளர்ச்சி க்காக பணியாற்றி இறந்தவர்க ளுடைய குழந்தைகளுக்கு பணி  வழங்க வேண்டும் என்று கோரி கடந்த 5 ஆண்டுகளாக சிஐடியு போராடி வருகிறது. ஆனால், ஒரு வருக்குக் கூட அரசு உப்பு நிறுவனம் பணி வழங்க மறுத்து வருகிறது. 1600 பேர் பணிபுரிந்த உப்பு நிறு வனத்தில் தற்போது 1200 தொழிலா ளிகள் தான் பணியாற்றி வருகிறார் கள். என்எம்ஆர் 400 பேருக்கு புதிதாக ஆள் எடுங்கள் என்று சொன்னால், ஒருவரை கூட எடுப்பதற்கு நிர்வாகம் முன்வர வில்லை.  மேலும் இந்த தொழிற்சாலை லாபம் பார்ப்பதற்காக உருவாக் கப்பட்ட தொழிற்சாலை அல்ல. வறட்சி மிகுந்த பகுதி என்பதால் வேலைவாய்ப்பை உருவாக்குவ தற்காக உருவாக்கப்பட்ட நிறு வனம் ஆகும். இந்த நிலையாணை விதிகள் இன்று இருக்கும் நிறுவன அதிகாரிகளுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.

இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம் தொடர்கிறது. ஆனால், நிர்வாகம் தொழிலாளர்கள் மீதும் தொழிற்சங்கம் மீதும் ஒரு குற்றச்சாட்டை சுமத்த தயாராகி வருகிறது. வேலை நிறுத்தம் செய் வதால்தான்  உற்பத்தி குறைவு ஏற்பட்டு விட்டது என்று சொல் வார்கள். தொழிற்சங்க தரப்பில் மிகத் தெளிவாக வலியுறுத்துகிறோம் உற்பத்தி குறைவுக்கு காரணம், வேலை நிறுத்தத்திற்கு காரணம் நிர்வாகச் சீர்கேடு தான். இந்த வேலை நிறுத்தம் தொழிலாளிகள் மீது சுமத்தப்பட்ட வேலைநிறுத்தம் ஆகும். எனவே, தமிழ்நாடு அரசு உப்பு நிறுவன நிர்வாகம் அரசியல் தலை யீட்டின் காரணமாக பணிய மர்த்தப்பட்டவர்களை உடன டியாக பணியிலிருந்து நிறுத்தி, வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அதோடு, உப்பு நிறுவனத்தில் பணி யாற்றிய தொழிலாளருடைய வாரிசுக்கு வேலை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற அரசியல் தலையீட்டுக்கு உப்பு நிறுவன நிர்வாகம் அடிபணியக் கூடாது என இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) இராமநாதபுரம் மாவட்டக் குழுவின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். வேலை நிறுத்தம் புதனன்று முடிவுக்கு வரவில்லை எனில் வியாழனன்று காலை முதல் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சிவாஜி தெரிவித்துள்ளார்.