சிந்தன் என்ற பேரு எங்கள் நெஞ்சினிலே
என்றும் நிலைத்துநின்று வழிகாட்டி செல்லுதய்யா
செங்கொடியை காத்துநின்ற தீரன் அவன்
உழைக்கும் மக்கள் போற்றும் அன்புமிக்க தோழன் அவன்
வெள்ளையரை எதிர்த்த அந்த வீரப்போரிலே
உன் தேகம் ஏற்ற விழுப்புண்கள் எத்தனை எத்தனையோ
இளம்வயதில் நீயும் சிறைவாசம் புகுந்தாய்
அதை இன்று நினைக்கும் போதும் எங்கள் மெய் சிலிர்க்குதய்யா
மாரக்சியந்தான் வறுமை நீக்கும் மாமருந்தென்றாய்
அந்த மாமருந்தின் பெருமைதனை எங்கும் உரைத்தாய்
பாடுபடும் தொழிலாளர் தோழர்களோடு
சகதோழனாக நின்று அருந்தொண்டுகள் செய்தாய்
மாற்றணியில் உள்ளவரும் போற்றிடும் வண்ணம்
நீ மாசற்ற தலைவன் என்ற பேரும் எடுத்தாய்
மக்கள் ஜனநாயகப் புரட்சிப் பாதையில்
நீ விட்டுச் சென்ற பணியை நாங்கள் செய்து முடிப்போம்.
கா.சேதுராமன், மதுரை