districts

img

பூதப்பாண்டியில் தேரோட்டம் அமைச்சர் துவக்கி வைத்தார்

நாகர்கோவில் ஜன. 17 பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி சிவகாமி அம்பாள் கோயில் தைப் பெருந்தேர் திருவிழா கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொ டங்கியது. விழா காலங்களில் தினமும் பட்டி மன்றம்,சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. கொரோனா நிலையான கட்டுப்பாடுக ளுக்கு உள்பட்டு பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோயில் தேரோட்டத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள் ளது. அதன்படி 9ஆம் திருவிழாவான திங்க ளன்று தேரோட்டம் நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு அமைச்சர் மனோதங்கராஜ் திருத் தேர் வடம் தொட்டு இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் எம்எல்ஏ. தளவாய் சுந்தரம், முன்னாள் எம்எல்ஏ ஆஸ்டின் மற்றும் திரளான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். 10 வது நாள் திருவிழாவான ஜனவரி 18 செவ்வாய்க் கிழமை மாலை 6 மணிக்கு ஆறாட்டு நிகழ்வும் இரவு 10 மணிக்கு தெப்போற்சவம் நிகழ்ச்சி யும் நடைபெறுகிறது. பூதப்பாண்டி பேரூராட்சி மற்றும் கோயில் நிர்வாகம் இணைந்து கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக முக கவசம் மற்றும் சானிட்டைசர்கள் வழங்கின.