விருதுநகர், மார்ச் 17- விருதுநகரில் நல்ல நிலையில் இருந்த சாலையின் மீது மீண்டும் புதிய தார் சாலை அமைத்து பல லட்சம் ரூபாய்களை அரசு உத்த ரவை மீறி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வீணடித்தனர். மாவட்டத் தலைநகரான விருதுநகரின் முக்கிய சாலை யாக இருந்து வருவது கிருஷ்ண மாச்சாரி சாலை. இச்சாலையா னது, பர்மா காலனி நுழைவு பகுதி முதல் கருமாதி மடம் வரை உள்ள தாகும். இந்நிலையில், பாத்திமா நகர் அருகே உள்ள நகராட்சி கழிவு நீரேற்று நிலையத்திலிருந்த பர்மா காலனி வரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலைத் துறையினால் சாலை அமைக்கப்பட்டது. இச்சாலை நல்ல நிலையில் இருந்து வந்தது. இந்தநிலையில், நகராட்சி சார்பில் ஒரு சில இடங் களில் சாலையின் குறுக்கு குடி நீர் குழாய்க்காக தோண்டப்பட் டது. இதற்காக நெடுஞ்சாலைத் துறையில் அனுமதியும் பெறப் பட்டிருந்தது. நிலைமை இவ்வாறு இருக்க, குழாய்க்காக தோண்டப்பட்ட இரு பகுதியைச் சுற்றிலும் சுமார் 15 மீ தூரத்திற்கு சாலைகளை நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம், தனியார் ஒப்பந்தகாரர் மூலம் தோண்டியது. அங்கு புதிய சாலை அமைப்பதற்கான பணி களை தொடங்கியது. அதன்படி, கற்தூசி மற்றும் ஜல்லி கற்களி னால் ஆன கலவையை அங்கு கொட்டியது. இதனால், தோண்டப்பட்ட இடத்தில் மட்டும் புதியதாக தார் சாலை அமைக்கும் பணி நடை பெறவுள்ளது என அப்பகுதி யினர் நினைத்தனர்.
ஆனால், நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கள், அதற்கு மாறாக, பார்மா காலனி முதல் பாத்திமாநகர் கழிவு நீரேற்று நிலையம் வரை ஏற்கனவே, நல்ல நிலையில் இருந்த தார் சாலையின் மீது புதிய தார் சாலை அமைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். இத னால் பொது மக்கள் அதிர்ச்சி யடைந்தனர். அதிலும், தமிழக அரசு சமீ பத்தில் அறிவித்த உத்தரவை மீறி நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கள் தார் சாலை அமைக்கும் பணியை செய்தனர் எனவும், இங்கு தார் சாலை அமைக்கும் பணத்தை வைத்து வேறு பகுதி யில் சாலை இல்லாத அல்லது மோசமான சாலை உள்ள இடத் தில் சாலையை போட்டிருக்க லாம் எனவும் பொதுமக்கள் வேத னையுடன் தெரிவித்தனர். அதாவது, புதிய தார் சாலை அமைக்கும் போது, ஏற்கனவே, இருந்த சாலையை பெயர்த்தெ டுத்து விட்டு அங்கு சாலை அமைக்கும் பணியை செய்திட வேண்டும் என தமிழக அரசு உத்த ரவிட்டிருந்தது. அவ்வாறு செய் யும் பட்சத்தில் சாலையின் உயர மானது மேலும், மேலும் அதி கரிப்பது தடுக்கப்படும் என தெரி வித்திருந்தது. ஆனால், அரசின் உத்தரவை மதிக்காத நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், அந்த உத்தரவை காற்றில் பறக்க விட்டு விட்டு, ஏற்கனவே, நல்ல நிலையில் இருந்த தார் சாலையின் மீது மீண்டும் புதிதாக தார் சாலையை போட்டுள்ளனர். எனவே, அரசின் விதிமுறை களை மீறி ஏற்கனவே, நல்ல நிலை யில் இருந்த சாலையின் மீது புதிய தார் சாலை அமைத்து அரசுப் பணத்தை விரயம் செய்த நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.