districts

img

பாலியல் தொல்லை புகாரை கண்டுகொள்ளாத கல்வி அதிகாரி மீது நடவடிக்கை எடுத்திடுக!

மதுரை, மார்ச் 18- மதுரை அருகே பாலியல் தொல்லை புகார் மீது நடவடிக்கை எடுக்காத கல்வி அதிகாரி மீது நட வடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டு மென உண்மை கண்டறியும் வலி யுறுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே பள்ளிக் குழந்தைகளை பாலியல் தொல்லை செய்வதாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத முதன்மைக் கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமத்திற்குச் சென்ற உண்மை கண்டறியும் குழுவினர் தெரி வித்தனர். மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா மணப்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் பாரதி மாணவிகளிடம் தவறாக நடக்க முயற்சித்த  (பாலியல் தொல்லை) குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தநிலையில் சம்பவம் குறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உண்மை கண்டறியும் குழுவை நியமித்தது.

அந்தக்குழு வினர் பாதிக்கப்பட்ட மாணவிகள், மாணவர்கள், பெற்றோர், கல்விக் குழுத் தலைவர், மாதர் சங்க நிர்வாகி களிடம்  விசாரித்ததன் அடிப்படையில் கிடைத்த தகவல்களை மதுரை ஆட்சியர் அனீஷ்சேகரின் கவ னத்திற்கு வியாழனன்று கொண்டு சென்றது இது தொடர்பாக  உண்மையைக் கண்டறியும் குழுவின் உறுப்பினரான வழக்கறிஞர் உ. நிர்மலா ராணி செய்தியாளர்களிடம் கூறியதாவது” பள்ளிக்குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஆசி ரியர் பாரதி தனது  அதிகாரத்தை  துஷ்பிரயோகம் செய்துள்ளார். அவரது நடவடிக்கை  பாலியல் தொல்லை கொடுத்ததை உறுதிப் படுத்துகிறது.” “இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் குறித்து தலைமை ஆசிரியர் புகார் அளித்து பத்து நாட்களாகிய பிறகும் கூட  முதன்மைக் கல்வி அதிகாரி  சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கையோ அல்லது சட்ட நடவடிக்கையோ  எடுக்கவில்லை. ஆசிரியரின் நடவ டிக்கை  பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாது காக்கும் சட்டத்தின் (போக்சோ) கீழ்  தண்டனைக்குரிய குற்றமாகும்” என்றார். மேலும், குழந்தைகள் நலக் குழு (சிடபிள்யுசி) விசாரணை உணர்வுப் பூர்மற்றது. சட்டத்திற்கு ஒவ்வாதது. பாதிக்கப்பட்ட குழந்தைகளை புகைப்படம் எடுத்தது குழந்தைக ளுக்கு மனதில் ஒரு பயத்தையும் அவ நம்பிக்கையையும் ஏற்படுத்தி யுள்ளது.

பாதிக்கப்பட்ட குழந்தைக ளின் வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்யும் முறை சட்டத்திற்கும் உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கும் எதிரானது. குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் நியமன முறையை தமிழக மெங்கும் மாற்றி அமைக்க வேண்டி யது தமிழக அரசின் பொறுப்பு. பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம், “தொடுவதில் என்ன தவறு?” என்று கேட்டுள்ளனர். “இது போன்ற கேள்வி களை குழந்தைகள் நலக்குழு  கேட்டி ருக்கக் கூடாது. நியமன உறுப்பினர் தேர்வில் வெளிப்படை தன்மை தேவை. குறைந்த பட்சம் குழந்தை கள் நலத்துறையில் முன் அனுபவம் உள்ளவர்கள் தான் இந்தப்  பணிக்குப் பொருத்தமானவர்கள் எனக் கருதுகிறோம். சட்டப்பிரிவு 161-இன் படி  வாக்கு மூலத்தைப் பதிவு செய்வது காவல் அதிகாரிகளின் கடமையாகும். ஆனால் இங்கே, மாணவிகளின் வாக்குமூலங்களை தாங்களாகவே எழுதியுள்ளனர், இது எதிர்காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படலாம். இந்த சம்பவத்தில் பள்ளித் தலைமையாசிரியர், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர், கல்விக் குழுத் தலைவர் ஆகியோரின் உடனடித் தலையீடு மாணவி கள் மற்றும் அவர்களது பெற்றோர்க ளிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி யுள்ளது. இவர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். சம்பந்தப்பட்ட  ஆசிரியர் தனது மோசமான நடவடிக்கையை தொடர்வதற்காக மாணவிகளை வகுப்பறையின் உள்ளே அமர்ந்து படிக்கச் சொல்வதும், மாணவர்களை மரத்தடியில் அமர்ந்து படிக்க வைத்துள்ளார், பாதிக்கப்பட்ட  மாணவிகள்  தங்க ளுக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். பள்ளியில் உள்ள புகார் பெட்டியிலும் புகாரை எழுதிப் போட்டுள்ளார்கள். தலைமையாசிரியரிடமும் புகார் தெரிவித்துள்ளனர். அதன் பின் தான் பிரச்சனை வெளிச்சத்திற்கு வந்துள் ளது. மாணவிகள் உதவி எண் - 1098 ஐயும் அழைத்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் பாரதியின் அரசியல் செல்வாக்கு இந்த வழக்கில் நியாயமான நடவ டிக்கைகளை சீர்குலைக்கும் என்று கருதுகிறோம். ஆசிரியர்  மீது உரிய மேல் நடவடிக்கை எடுக்க  வேண்டும். இந்த வழக்கிற்கு உதவும்  வகையில் பாதிக்கப்பட்ட மாணவி கள் அவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உரிய வழிகாட்டுதல் செய்ய வேண்டும். இது தொடர்பாக மதுரை ஆட்சியர் அனீஷ்சேகரைச் சந்தித்து மனு அளித்து கேட்டுக்கொண்டுள்ளோம் என்றார் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு மாநில அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என உண்மை கண்டறியும் குழுவில் இடம் பெற்றுள்ள மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் உ.நிர்மலாராணி, மன நல ஆற்றுப் படுத்துநர் மதுரை ஆர்.பத்மகுமாரி, பெனின்சுலா பவுன்டேஷன் ஆராய்ச்சி அதிகாரி சென்னையைச் சேர்ந்த ஆர்.மதுவந்தி, எல்ஐசி உழைக்கும் பெண்கள் ஒருங்கி ணைப்புக்குழுவின் கன்வீனர் ஜெ.விஜயா, அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்க மாநிலச் செயலா ளர் எஸ்.கே.பொன்னுத்தாய் ஆகி யோர் வலியுறுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட 33 பேரில், 14 பேர் பட்டியல் சாதியினர்  மற்றும் பட்டியல் பழங்குடி வகுப்பைச்  சேர்ந்த வர்கள், அவர்களின் பெற்றோர்  தினக்கூலி தொழிலாளர்கள்.  விசாரணை முறைகள்  கண்ணிய மாக நடைபெறவேண்டும். தவறும் பட்சத்தில் மாணவிகளின் எதிர்காலம் பாதிக்கும், ஏனெனில் அவர்கள் இயற்கையாகவே பள்ளிக்குச் செல்வதை நிறுத்திக்கொள்வார்கள் என்று வழக்கறிஞர் உ.நிர்மலாராணி தெரிவித்தார். மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை, வழக்கறிஞர் உ.நிர்மலாராணி, மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.கே. பொன்னுத்தாய், மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் பிரேமலதா, மாவட்டச் செயலாளர் செ.முத்து ராணி மற்றும் மதுவந்தி ஆகியோர் அளித்தனர்.