districts

img

தென்காசி: வார்டு சபைக் கூட்டம்

தென்காசி, நவ. 2 தென்காசி நகராட்சி 16ஆவது வார்டு பகுதி சபா கூட்டம் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினரும், 16ஆவது வார்டு பகுதி சபா தலைவருமான மாரியப்பன் தலைமையில் நடைபெற்றது. வார்டு கவுன்சிலர் ஜெயலட்சுமி, நகராட்சி வருவாய் அலுவலர் அபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் உலகநாதன், தையற் கலைஞர் காந்திசங்கர், ஆதிபராசக்தி வழி பாட்டு  மன்ற நிர்வாகி பத்மநாபன், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் லோகநாயகி, கல்யாணி உள்ளிட்ட திரளானவர்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதியின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க கூறினர். விரைவில் முக்கிய பிரச்சனைகளான கழிவுநீரோடையை சீராக்குதல், குடிநீர் பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்படும் என நகராட்சி சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவ ருக்கும் குப்பை சேகரிக்கும் கூடைகளை கவுன்சிலர் ஜெயலட்சுமி  நகராட்சி சார்பில் வழங்கினார்.