districts

img

வாக்குறுதியை அமல்படுத்தாத டாஸ்மாக் நிர்வாகம்

தேனி, டிச.19- தேனி மாவட்டம் சின்ன மனூர் எள்ளுக்கட்டை தெரு வில் உள்ள 8547 அரசு மது பானக் கடை இயங்கி வரு கிறது. இதனால் பெண்கள், மாணவ-மாணவிகள், வர்த்த கர்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர் .கடையை இட மாற்றம் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர்ந்து புகார்  மனு அனுப்பி வலியுறுத்தப் பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம்  மதுக்கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி கட்சி யின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி தலைமையில் பூட்டு போடும் போராட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த  உத்தமபாளையம் வட்டாட்சி யர் மற்றும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஆகி யோர் போராட்டத்தில் ஈடு பட்ட தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் மூன்று மாதத்திற்குள் மதுக்  கடை இடமாற்றம் செய்யப்  படும் என உறுதியளித்த தோடு எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தனர் .எனி னும் காலக்கெடு முடிந்தும் மதுக்கடையை இடமாற்றம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆர்ப்பாட்டம் டாஸ்மாக் மேலாளர் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் மதுக்கடை யை இடமாற்றம் செய்ய வலி யுறுத்தி தேனி ஆட்சியர் அலு வலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பில் சின்னம னூர் வர்த்தகர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் டி. வெங்கடேசன், இ,தர்மர் சின்னமனூர் ஒன்றியச் செய லாளர் கே.எஸ்.ஆறுமுகம்,  நகர் பொறுப்பாளர் எம். மணி கண்டன் மற்றும் வர்த்தகர் கள் கலந்து கொண்டனர். பின்னர் ஆட்சியர், டாஸ்  மாக் மேலாளரிடம் மதுக்  கடையை அகற்ற வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.