districts

img

தமுஎகச சமூக நீதி நாள் கருத்தரங்கம்

திண்டுக்கல், செப்.12 திண்டுக்கல்லில் தந்தை பெரியார் 144வது பிறந்த தினம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பாக சமூக நீதி நாளாக அனுஷ்டிக்கப்பட்டது.  திண்டுக்கல்லில் நகர்கிளையின் சார்பாக நடைபெற்ற கருத்தரங்கில் தேனி மாவட்டச்செயலாளர் அய்.தமிழ்மணி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கு நகரத்தலைவர் வைத்தியலிங்க பூபதி தலைமை வகித்தார். செயலாளர் தாமோதரன் முன்னிலை வகித்தார். திண்டுக்கல் இலக்கிய களத்தலைவர் பேரா. ஆர்.மனோகரன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர்  ஜி.ராணி, தமுகஎச மாவட்டத்தலைவர் வரத.ராஜமாணிக்கம், மாவட்டச்செய லாளர் கவிவாணன், மாநிலக்குழு உறுப்பினர் ரேவதி முகில்,கலை இலக்கிய பெருமன்ற மாவட்டச்செயலாளர் பிரபாகரன், துளிர் இலக்கிய நண்பர்கள் குழுவின் நிறுவனர் முகமது யூசுப் அன்சாரி, தந்தை பெரியார் திராவிடர் கழக பிரச்சார செயலாளர் துரை. சம்பத், நகர  துணைச்செயலாளர் பிரேம் ஆகியோர் பேசினர். அப்துல் காதர் குழுவினரின் துண்டு நாடகம் நடை பெற்றது. கோபால் நன்றி கூறினார். (நநி)

;