districts

img

பயிர் காப்பீட்டுத் தொகை கோரி மனுக் கொடுக்கும் போராட்டம்

விருதுநகர், ஏப்.8- 3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பயிர் இன்சூரன்ஸ் தொகை வழங்கக் கோரி தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தினர் போராட்டத் தில் ஈடுபட்டனர். வச்சக்காரப்பட்டி பகுதியில் உள்ள விவசாயிகள் மக்காச் சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர் களை தங்களது நிலத்தில் பயி ரிட்டிருந்தனர். இதற்காக இன்சூரன்ஸ் தொகையும் 2019 முதல் 2021 வரை செலுத்தியிருந்தனர். ஆனால், இழப்பீட்டுத் தொகை 3 ஆண்டுகளாக வழங்கப்பட வில்லை. எனவே, உடனடியாக இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனுக் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு விவசாயி கள் சங்க தெற்கு ஒன்றிய செய லாளர் சேதுராமசாமி தலைமை யேற்றார். துவக்கி வைத்து சிபிஎம் ஒன்றிய செயலாளர் பி.நேரு பேசி னார். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.முருகன் உரை யாற்றினார். இதில், மங்கையற் கரசி, பால்சாமி ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.  ேலும் வேளாண்மை இணை இயக்குநர் மற்றும் தோட்டக்கலை இயக்குநர் ஆகியோரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.