மதுரை, அக்.16- மதுரை தக்ஷணா ரயில்வே தொழிலாளர் சங் கம் (சிஐடியு) சார்பில் மதுரை கோட்ட மகாசபை கூட்டம் ஞாயிறன்று மதுரை காக்கா தோப்பு மூட்டா அரங்கில் எம்.சி.அன்பரசன் தலைமையில் நடைபெற் றது. நிகழ்விற்கு ஆர்.சங்கர நாராயணன், ஆர்.திரு மலை ஐயப்பன், டென்சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செய லாளர் ஹாரி லால், சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா. லெனின் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், தலைவராக கே.ராஜூ, செயலாளராக எம்.சி.அன்பரசன், பொரு ளாளராக பி.சரவணன் உள் ளிட்ட 13 பேர் கொண்ட நிர் வாக குழு தேர்வு செய்யப் பட்டது. கூட்டத்தில், புதிய பென் சன் திட்டத்தை ரத்து செய்திட வேண்டும், 18 மாத “டிஏ” வை அரியருடன் வழங்க வேண்டும். ரயில்வே கேட்டு களில் முன்னாள் ராணு வத்தினரை பணியமர்த்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும். போனஸ் சீலிங்கை ரத்து செய்து உண்மையான ஊதிய அடிப்படையில் போனஸ் வழங்கிட வேண்டும். உற் பத்தி திறனுக்கேற்றவாறு போனஸ் நாட்களை அதி கப்படுத்த வேண்டும். ரயில்வே கேட்டுகளில் 8 மணி நேர வேலையை அமல் படுத்த வேண்டும். ரயில்வே மைதானத்தை தனியார் மய மாக்கும் போக்கினை கைவிட வேண்டும். ரயில்வே மருத்துவமனையில் மருத்து வர், ஆய்வக நுட்பநர், மருந்துகள் பற்றாக்குறை யை போக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.