திருவில்லிபுத்தூர், ஜூலை 31- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்ட விழா ஏற்பாடு குறித்து சிவகாசி சார் ஆட்சியர் பிரித்திவிராஜ் ஞாயிறன்று நேரடியாக ஆய்வு செய்தார். ஆய்வின் போது கோயில் செயல் அலுவலர் முத்து ராஜா, வட்டாட்சியர் ராமசுப்ரமணியன், நகராட்சி ஆணையர் ராஜமாணிக்கம், நகர காவல் ஆய்வாளர் கீதா, நகர தீய ணைப்பு அலுவலர் ஆகியோர் உடனிருந்தனர்.