விருதுநகர், ஏப்.23- உயர் நீதிமன்றங்களில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க கோரி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் விருது நகர் மற்றும் சாத்தூரில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. விருதுநகர் நீதிமன்றத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் அர்ஜூனன் தலைமையில் வழக்கறிஞர்களிடம் துண்டறிக்கை வழங்கி கையெ ழுத்து பெறப்பட்டது. இதில்,மாநிலக்குழு உறுப்பினர் எம்.சுப்புராம், மாவட்ட செயலாளர் டி.சத்தியராஜ், மாவட்டக்குமு உறுப்பினர்கள் சர வணக்குமார், ஏ. முத்துமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சாத்தூரில் வழக்கறிஞர் வி.ஏ.விஸ்வநாத் தலைமையில் தமுஎகச மாவட்டசெயலாளர் லட்சுமிகாந்தன் துவக்கி வைத்தார். வழக்கறிஞர் சங்க மாநில செயலாளர் கே.பாண்டீஸ்வரி, யோகலட்சுமி, ராஜேஸ் கண்ணண் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.