விவசாயிகளுக்கு பாதகமான நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை தமிழக அரசு திரும்பப்பெற வலியுறுத்தி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கண்டரமாணிக்கத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் மோகன், மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய குழு உறுப்பினர் அழகப்பன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.