மதுரை, டிச.10- புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.புதிய தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ திரும்பப் பெற வேண் டும், பழைய வரையறுக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்ட மைப்பு சார்பில் மாபெரும் கையெழுத்து பிரச்சார இயக்கம் மதுரை,சிவகங்கையில் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாபு பிரேம் குமார் தலைமை வகித்தார். பல்வேறு சங்க நிர்வாகிகள் சுரேஷ் .முருகன், சரவண குமார், செல்வம், கணேசன் ஆகியோர் பேசி னர். சிவகங்கை சிவகங்கை, காரைக்குடியில் பிரச்சா ரம் நடைபெற்றது. சிவகங்கையில் நிர்வாகி கள் நாகராசன், சேதுசெல்வம், சுரேஷ் கண்ணா, தாமஷ்அமலநாதன், முத்துசாமி, பீட்டர் ஆகியோர் பேசினர். காரைக்குடியில் சிவக்குமார் தலைமை யில் பிரச்சார இயக்கம் நடந்தது. மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டி, மாவட்டத் தலைவர் ரஞ்சித் ஆகியோர் பேசினர்.