திண்டுக்கல், ஜூலை 28- பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த கோழி, சேவல்களை ஏலம் நடத்த விடாமல் நிர்வாக அதி காரியிடம் இந்துமுன்னணி உள்ளிட்ட சங்பரிவார கும்பல் தக ராறில் ஈடுபட்டனர். பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக கோழி, சேவல்கள் விடுவார்கள். அந்த கோழிகளை கூண்டு நிறைந்தவுடன் ஏலம் விடுவது வழக்கம். அதன் படி வியாழனன்று மாலை விஞ்ச் எதிரில் உள்ள கோசாலையில் கோவில் நிர்வாக அதிகாரி லட்சுமி தலைமையில் கோழி சேவல்கள் ஏலம் விடப்பட்டன. இந்த ஏலத்தில் பொதுமக்கள் அதிகமானவர்கள் கலந்து கொண்டு ஏலம் கேட்டனர். இதனால் வழக்கத்தை விட கோழிகள் அதிக விலைக்கு ஏலம் போனது. இதற்கு முன்பு மலைக் கோவிலில் ஏலம் விடப்பட்டு வந்தது. மாலை நேரத்தில் ஏலம் விடப்படும். பொதுமக்களில் ஏலம் எடுப்பவர்கள் குறைவாக இருப் பார்கள். அந்த சமயத்தில் இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட சங்ப ரிவார் கும்பல் சிண்டிகேட் அமை த்துக்கொண்டு ஏலத்தை குறைத் துக் கேட்டு வாங்கிச்செல்வார்கள். இந்நிலையில் கோவில் அதிகாரி லட்சுமி இந்த முறை கோசாலை யில் ஏலம் விட்டதையடுத்து பக் தர்கள், பழனி நகர் பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டு ஏலம் கேட்டனர். கோழி, சேவல்கள் அதிக விலைக்கு ஏலம் கேட்டதால் கோவில் நிர்வாகத்தி ற்கு இந்த ஏலத்தின் மூலம் நல்ல வருவாய் கிடைத்தது. சங் பரிவார கும்பல்களின் சிண்டிகேட்டுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் ஆத்திரமடைந்த இந்துமுன்னணி சங்பரிவார கும்பல் கோவில் நிர்வாக அதிகாரி லட்சுமியிடம் தக ராறில் ஈடுபட்டனர். தொடர்ந்து சங்பரிவார கும்பல் பழனி கோவில் பிரச்சனைகளில் தலையிட்டு தகராறு செய்வதை வாடிக்கையாக செய்து வருகிறார் கள். சில தினங்களுக்கு முன்பு கோவில் பிரசாத கடையில் எதற் காக மஞ்சள் பையை ரூ.10க்கு விற்கிறீர்கள், இலவசமாக தர வேண்டும் என்று கேட்டு தகராறு செய்துள்ளனர். பிரசாதக் கடையில் மஞ்சள் பை ரூ.10 பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டத்தின் அடிப்படையில் விற்று வருவது அனைவருக்கும் தெரிந்தது தான். அதையும் இல வசமாக தரவேண்டும் என்று தகராறு செய்தனர். அதிமுக ஆட்சி யின் போது கோவில் அதிகாரி களை மிரட்டி தங்களுக்கு தேவை யான பல காரியங்களை சாதித்துக் கொண்ட இவர்கள் ,தற்போது ஆட்சி மாறியதும் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இத னால் உப்புக்கு உதவாத பிரச்சனை யையும் பெரிதுபடுத்தி அரசியலாக் குகிறார்கள். இதற்கு பழனி நகர மக்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். (நநி)