மதுரை, ஜூலை 9- மதுரை மாவட்டத்தில் நாளுக்கு நாள் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வரு கிறது.இந்நிலையில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் மதுரை மாவட்டத்தில் தோட்டக் கலைத்துறை சார்பில் உழவர் சந்தைகளில் தக்காளி சற்று குறைவான விலையில் விற பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் சொக்கிக்குளம், அண்ணா நகர், பழங்காநத்தம், ஆனையூர், மேலூர், திருமங்கலம் மற்றும் உசிலம்பட்டி ஆகிய ஏழு இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகிறது. இதில் தினமும் சுமார் 5.11 டன் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வரு கிறது. அதிகபட்சமாக சொக் கிக்குளம். உழவர் சந்தையில் 1.8 டன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. காய்கறிகளில் நுகர்வோர் மத்தியில் அதிக அளவு பயன் படுத்தக்கூடிய ஒன்றாக தக்காளி விளங்குகிறது தற்பொழுது இதன் விலை ஏற்றத்தினை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தோட் டக்கலைத்துறை மூலம் விவ சாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து ஜூலை 9 ஞாயிறு முதல் உழவர் சந்தை களில் குறைவான விற்பனை செய்திட நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளது. உழவர் சந்தைகள் தவிர தோட்டக்கலைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் டான்ஹோடா விற்பனை நிலை யம் மூலமாகவும் மற்றும் தேசிய தோட்டக்களை இயக்கத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட காய்கறி விற்பனை வண்டிகளின் மூலமாகவும், சில்லறை விற் பனை அங்காடி மூலமாகவும் இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை சுமார் 270 ஹெக் டேரில் தக்காளி சாகுபடி. செய் யப்பட்டு வருகிறது. இதில் தற்பொ ழுது அறுவடை நிலையில் உள்ள வயல்களில் விவசாயிகள் சம் பந்தப்பட்ட தோட்டக்கலைத் துறை வட்டார அலுவலகங்களை அணுகி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. என்று மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் தோட் டக்கலை இணை இயக்குநர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக் கையில் கேட்டுக்கொண்டுள்ள னர்.