districts

img

மதுரை மீனாட்சிக்கு பட்டாபிஷேகம்: செங்கோலைப் பெற்றுக்கொண்டார் ருக்மணி பழனிவேல் ராஜன்!

மதுரை, ஏப். 20 - மதுரை சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற மீனாட்சி யம்மன் பட்டாபிஷேக நிகழ்ச்சியில், கோயிலின் அறக்காவலர் குழுத் தலை வரான ருக்மணி பழனிவேல் ராஜன் செங்கோலைப் பெற்றுக் கொண்டார். செங்கோலுடன் சுவாமி சன்னதி 2-ஆம் பிரகாரம் வழியாக வலம் வந்து மீண்டும் அதனை மீனாட்சி அம்மனிடம் கொடுத்தார்.

இதன்மூலம் மீனாட்சி அம்மன் கோவில் பட்டாபிஷேக விழாவில் முதன்முறையாக பெண் ஒருவர் செங்கோல் பெற்ற நிகழ்வு தனிச்சிறப்பைப் பெற்றுள்ளது. முன்னதாக, அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன், கணவரை இழந்தவர் என்பதால் அவர் செங்கோல் வாங்கக்கூடாது என உத்தர விட வேண்டுமென சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் தினகரன் என்ப வர் வழக்கு தொடர்ந்தார்.

ஆனால், இந்த வழக்கு ஏற்கத்தக்கது அல்ல என்று கூறி உயர்நீதிமன்ற தனி நீதிபதி சரவணன் தள்ளுபடி செய்தார். “செங்கோல் வாங்குபவரும் இந்து தானே? அதில் என்ன பிரச்சனை வரு கிறது.. நவீன காலத்திலும் இதுபோன்ற கருத்துக்களை முன்வைப்பது ஏற்கத் தக்கதல்ல.

பிற்போக்குத்தனமான கோ ரிக்கையுடன் வழக்கு தொடர்வதை அனுமதிக்க முடியாது” என்றும் அதிரடி யாக தெரிவித்தார். ஆனால் மனுதாரர் தினகரன், “ஆகம விதிகளை முறையாகப் பின் பற்றுவது அவசியம். எனவே, தனி நீதி பதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என  ஆர். சுரேஷ்குமார், ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வுக்குச் சென்றார். அங்கு நடைபெற்ற விசாரணை யின்போது, அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா  கதிரவன், “இந்த வழக்கில் தனி நீதிபதி யின் உத்தரவு தெளிவாக உள்ளது.

எனவே, அதில் மேற்கொண்டு வேறு உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை” என்றார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “முந்தைய காலங்களில் என்ன நிகழ்ந்தது என்பது தெரியாது. நூல்களின் அடிப்படையில் நீதிமன்றம் முடிவுக்கு வர இயலாது. நீதிபதிகள் ஆகம விதிகளுக்கான நிபு ணர்கள் அல்லர் என்பதால், தற்போது எந்த முடிவையும் எடுக்க இயலாது.

எனவே, ஆகம விதிகள் குறித்து முறை யாக அறிக்கை ஆவணங்களை தாக்கல் செய்தால், அதை ஆய்வு செய்து முடிவு எடுக்கலாம். தனி நீதிபதியின் உத்தர வுக்கு தற்போதைக்கு தடை விதிக்க முடி யாது; எனவே, இந்த முறை செங்கோல் வழங்கும் நிகழ்வை வழக்கம் போல நடத்தலாம்” என்று உத்தரவிட்டனர். இந்தப் பின்னணியிலேயே தற் போது ருக்மணி பழனிவேல் ராஜன் செங்கோல் பெற்றது தனிச்சிறப்பைப் பெற்றுள்ளது. புராணப்படி, மதுரையை ஆண்ட மலையத்துவச பாண்டியனின் மகள் மீனாட்சி என்பதும், பாண்டியனுக்கு ஆண் வாரிசு இல்லாத நிலையில், மீனாட்சியே மதுரையின் அரசியாக முடிசூடிக் கொள்கிறார் என்பது ஐதீகம் ஆகும். அதன்படி சித்திரைத் திருவிழா வின் 8-ஆம் நாள் நிகழ்வான வெள்ளிக் கிழமையன்று மீனாட்சி பட்டாபிஷேகம் நடைபெற்றது.

அப்போது இரவு 7.45 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கு ராயர் கிரீடம் எனும் வைர கிரீடம் சூட்டியும், பரிவட்டம் கட்டியும் வேப்பம்பூ மாலை அணிவிக்கப்பட்டது. நவரத்தி னங்கள் பதித்த தங்க செங்கோலும் வழங்கப்பட்டது. மீனாட்சி அம்மனுக்கான இந்தச் செங்கோலைத் தான் அம்மனின் பிரதி நிதியாக கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன் பெற்றுக்கொண்டார். அவர் செங்கோலுடன் சுவாமி சன்னதி 2-ஆம் பிரகாரம் வழியாக வலம் வந்து  மீண்டும் மீனாட்சி அம்மனிடமே கொடுத்தார்.  அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன், இணை ஆணையர் கிருஷ்ணன் மற்றும் அறங்காவலர்கள் குழு உறுப்பி னர்கள் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.