மதுரை, ஜூலை 4- மதுரை வைகை தென்கரை சாலையில் ஓபுளா படித்துறைக்கும் விர கனூர் சுற்றுச்சாலை சந்திப்புக்கும் இடைப்பட்ட பகுதியில் தெருவிளக்கு கள் இல்லாததால் வாகன ஓட்டிகள், மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். குருவிக்காரன் சாலை சந்திப்பிலி ருந்து விரகனூர் சுற்றுச்சாலை சந்திப்பு வரை புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலை, போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க மக்கள் அதிகளவில் பயன்படுத்துவதால், தெருவிளக்குகள் அவசியம் தேவை. தெருவிளக்குகள் இல்லாத இந்தச் சாலை ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் என்ன செய்வது?. குறிப் பாக இரவு நேரங்களில் பெண்களுக்கு பாதுகாப்பற்றதாக இந்தச் சாலை உள்ளது. சமூக விரோதிகள் நடமாடு வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது பெண்களின் பாதுகாப்புக் கேள்விக்குறி யாக உள்ளது. இப்பகுதியில் நிறுவப்பட்டுள்ள எல்இடி விளக்கு வெளிச்சம் பெயருக் காக உள்ளது. இது தேவையை மக்களின் பூர்த்தி செய்யாது. மழை பெய்தால் மேடு-பள்ளங்கள் உள்ளது யாருக்கும் தெரியாது. அப்போது வெளிச்சம் பாய்ச்ச மறுக்கும் எல்இடி விளக்குகளை நம்பிப் பயனில்லை. போக்குவரத்து நெரிசலை மாநக ராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து,
மக்க ளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். உண்மையிலேயே வெளிச் சம் தரக்கூடிய விளக்குகளைப் பொருத்த வேண்டும். குருவிகரன்சாலை சந்திப்பிலி ருந்து ஓபுளா படித்துறை வரையிலான சாலையிலும் இதே நிலை தான். இங்கு கட்டுமானப் பணிகள் இன்னும் முடி வடையவில்லை. கட்டிக்கொண்ட இருக்கிறார்கள். சமீபத்தில் நடந்த மாநகராட்சிக் கூட்டத்தில் எரியாத தெருவிளக்குகள் குறித்து விவாதம் நடைபெற்றுள்ளது. எல்இடி பெயரளவிற்கு இருந்தால் போதும் எனக் கருதி இந்தப் பணி தனி யார் ஒப்பந்ததாரர்களின் கைகளில் கொடுக்கப்பட்டுள்ளதால் சிக்கலும் தீர வில்லை. பிரச்சனையும் தீரவில்லை. மண்டல குறைதீர் கூட்டத்தில இப்பிரச்சனை குறித்து மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளரிடம் தெரி வித்துள்ளதாகவும் நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்ததாகவும் கூறுகிறார் இப்பகுதி மாமன்ற உறுப்பினர் பாண்டீஸ்வரி. 2022-23 ஆம் ஆண்டிற்கான ரூ.83.25 லட்சம் செலவில், இரண்டாம் மண்ட லத்தில் தெரு விளக்குகளை இயக்கு வதற்கும் பராமரிப்பதற்கும் மதுரை மாநகராட்சியால் டெண்டர் விடப்பட் டுள்ளது என மாநகராட்சி தரப்பு தெரி விக்கிறது. மின்மினிப்பூச்சி போல எரியும் எல்இடி விளக்குளை உடனடியாக சக்தி வாய்ந்த விளக்குகளாக மாற்றவேண் டும் என்பதே மக்களின் கோரிக்கை.