இராமநாதபுரம், ஜூலை 30- தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் இராமநாதபுரம் தாலுகா 3 ஆவது மாநாடு மண்டபத்தில் உள்ள பேரூராட்சி மகாலில் தாலுகா தலை வர் நிலர் வேணி தலைமையில் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப் பினர்கள் கணேசன்,கோபால் முன்னிலை வகித்தனர், சங்கக்கொடியினை மாநிலக் குழு உறுப்பினர் கவிப்பிரியன் ஏற்றிவைத்தார். அஞ்சலி தீர்மா னத்தை மாவட்ட குழு உறுப்பினர் பிர்தௌஸ் கனி வாசித்தார். தாலு காக்குழு உறுப்பினர் பரமேஸ்வரன் வரவேற்றார். மாவட்ட தலைவர் கல் யாண சுந்தரம் துவக்கி வைத்துப் பேசினார். தாலுகா செயலாளர் அரி கரசுதன் வேலை அறிக்கை சமர்ப் பித்தார். சிபிஎம் தாலுகா செயலா ளர் செல்வராஜ் வாழ்த்திப் பேசினார். மாநாட்டில் புதிய நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர். தலை வராக நடராஜன்,செயலாளராக அரி கரசுதன், பொருளாளராக நிலர் வேணி, துணைத்தலைவர்களாக கருப்பையா, சண்முகவள்ளி, துணைச்செயலாளர்களாக கணே சன், பரமேஸ்வரன் உட்பட 17 பேர் கொண்ட தாலுகா குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டச் செயலா ளர் இராஜ்குமார் நிறைவுரையாற்றி னார். கணேசன் நன்றி கூறினார்.