districts

img

வருசநாடு- சிங்கராஜபுரம் இடையே புதிய தார் சாலை அமைக்க கோரிக்கை

கடமலைக்குண்டு, மே.4- தேனி மாவட்டம், வருசநாட்டில் இருந்து சிங்கராஜ புரம் கிராமத்திற்கு தார் சாலை அமைந்துள்ளது. சிங்க ராஜபுரம் கிராமத்திற்கு பேருந்து வசதி கிடையாது. ஆட்டோ, பைக் உள்ளிட்ட வாகனங்களை பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த  நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த தார் சாலை யில் எந்த வித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட வில்லை. அதன் காரணமாக தார் சாலை அதிக அள வில் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படு கிறது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என  பொதுமக்கள் பல கிராம சபை கூட்டங்களில் தீர்மானம்  நிறைவேற்றியும் தற்போது வரை எந்தவித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை.  இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக தார் சாலை அதிக  அளவில் சேதமடைந்தது. மேலும் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் பைக்,ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறது. அதேபோல லாரி, வேன் உள்ளிட்ட பெரிய வாகனங்கள் சாலை பள்ளங்களில் தடுமாறியபடி கடந்து செல்கிறது. பெரிய அளவிலான விபத்துகள் ஏற்படும் முன்பு அதிகாரிகள் உரிய நட வடிக்கை எடுத்து வருசநாடு சிங்கராஜபுரம் இடையே புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.