districts

img

சிவகாசியில் மாதர், மாணவர், வாலிபர் ஆர்ப்பாட்டம்

சிவகாசி, டிச.8- சிவகாசியில் அய்யநாடார் ஜானகி யம்மாள் கல்லூரி உள்ளது. இங்கு பணிபுரிந்த பேராசிரியர் டென்சிங் பாலையா அங்கு பயின்ற மாணவி யிடம் பாலியல் வன்முறையில் ஈடு பட்டுள்ளார். இந்த நிலையில், கல்லூரி யின் முதல்வர் இப்பிரச்சனையை மூடி மறைக்க முயன்றுள்ளார் எனக் கூறப் படுகிறது. அக்கல்லூரியின் முதல் வரை கைது செய்ய வேண்டும். கல்லுரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகாசியில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் கே.சமயன், மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.லட்சுமி, மாவட் டத் தலைவர் என்.உமா மகேஸ்வரி, மாவட்டச் செயலாளர் எஸ்.தெய் வானை, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.ஜெயபாரத், வாலி பர் சங்க மாவட்ட தலைவர் கே.கருப்ப சாமி, பொருளாளர் பி.கணேசன், மாணவர் சங்க மாவட்டத் தலை வர் ஜோதீஸ்வரன், சிஐடிய மாவட்ட செயலாளர் பி.என்.தேவா, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பி.பாலசுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர். விடுமுறை விட்ட  கல்லூரி நிர்வாகம் போராட்டம் நடைபெறும் என் பதை அறிந்துகொண்ட கல்லூரி நிர்வா கம் இரண்டாம், மூன்றாமாண்டு படிக் கும் மாணவ மாணவிகளுக்கு உட னடியாக விடுமுறை அறிவித்த தோடு, கல்லூரி வாசலில் வந்து மாண விகளை கல்லூரிப் பேருந்துகளில் அனுப்பிவைத்தனர்.

விடுமுறை விட்ட  கல்லூரி நிர்வாகம்

போராட்டம் நடைபெறும் என் பதை அறிந்துகொண்ட கல்லூரி நிர்வா கம் இரண்டாம், மூன்றாமாண்டு படிக் கும் மாணவ மாணவிகளுக்கு உட னடியாக விடுமுறை அறிவித்த தோடு, கல்லூரி வாசலில் வந்து மாண விகளை கல்லூரிப் பேருந்துகளில் அனுப்பிவைத்தனர்.

;