திருவலஞ்சுழியிலிருந்து - பட்டீஸ்வரம் செல்லும் சாலையில் ரயில்வே கேட் அருகே சாலையோரம் மின்மாற்றி உள்ளது. இதன் சிமென்ட் காரைப் பெயர்ந்து கம்பிகள் வெளித் தெரிகின்றன. இந்தச் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதன் அருகில் வீடுகள், கடைகள் அமைந்துள்ளன. கீழே விழும் அபாயநிலையில் உள்ள மின்மாற்றியை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.