districts

img

கே-ரயிலுக்கு எதிரான மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி இனியாவது ஊடகங்கள் உண்மைகளை வெளிப்படுத்துமா?

அமைச்சர் ராஜீவ் கேள்வி திருவனந்தபுரம், மார்ச் 29- ‘கே ரயிலுக்கு’ சர்வே நடத்தப் பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் நிராக ரித்து, தற்போது அரசின் நட வடிக்கையை உறுதி செய்துள் ளது. மாநில அரசுக்கும் கே ரயி லுக்கும் இந்த வழக்கில் வாதிட வேண்டிய அவசியமே எழ வில்லை என்பது செய்திகளில் காணமுடிந்தது. உண்மைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் வேலையை ஊடகங்கள் செய் யுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால், சில ஊடகங்களில் வெளியாகும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது’ என தொழில்துறை அமைச்சர் பி. ராஜீவ் தெரிவித்துள்ளார். தவறாகப் புரிந்துகொள்ளக் கூடிய செய்திகளை முன்வைப்ப வர்கள் எப்படி மக்களை முட்டா ளாக்குகிறார்கள் என்பதைப் பார்ப்போம். நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை ஆய்வு செய்த நாடாளு மன்ற நிலைக்குழுவில் பணி யாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்த போது, அதை ஆய்வு செய்து முடிந்தவரை பகிரங்கப்படுத்த முயற்சித்தேன். ‘மக்களின் உணர்வு இதற்கு எதிரானது’ என்று சொல்ப வர்கள் இந்த சட்டத்தையும் படிக்க வேண்டும். மக்கள் கருத்து என்று ஊடகங்கள், அரசியல் வாதிகள் முதல் நீதிமன்றம் வரை கூறுவது, அவர்களின் தனிப்பட்ட நம்பிக்கைகளாகும். மக்களுக்கு ஏற்படும் சிரமங் களைவிட பொது நலன் சார்ந்து இத்திட்டம் உள்ளதா என்பது முதல் குறைந்தபட்ச நிலம் கைய கப்படுத்துவது வரை அனைத்தை யும் சமூக தாக்க மதிப்பீடு தெளிவு படுத்தும்.

சமூக தாக்கம் குறித்த ஆய்வின் அடிப்படையில் எல் லைகள் முடிவு செய்யப்பட்டபின் நிலம் இழப்புக்கு வாய்ப்புள்ள நபர்களின் பொதுக்கருத்து கேட்பு சட்டத்தால் கட்டாயமாக் கப்பட்டுள்ளது. அதன்பிறகு வட்டார மொழியில் அறிக்கை வெளியிட வேண்டும். இந்த அறிக் கையும், சமூக தாக்க மேலா ண்மை ஆய்வும் நிபுணர் குழு வால் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும். இந்தக் குழுவில் மக் கள் பிரதிநிதிகளும் இடம்பெறு வார்கள். பொது நலனை விட சமூக தாக்கம் அதிகமாக இருந் தால் நிலத்தை கையகப்படுத்த முடியாது, குறைவாக இருந்தால் யாராலும் தடுக்க முடியாது. இவ் வளவு தெளிவான தகவல்கள் உள்ளபோது யாரை குழப்ப முயல்கிறார்கள். உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு இன்னொரு பரிமாணம் உண்டு. நீதிமன்றங்கள் சட்டத்தை அமல் படுத்த தேவையான அணுகு முறையை கையாள வேண்டும். கொள்கை முடிவுகளை எடுக்க நிர்வாகிகளுக்கு உரிமை உண்டு  என்று உச்சநீதிமன்றம் பலமுறை கூறியுள்ளது. சட்டப்படி, சமூக பாதிப்பு மதிப்பீடு ஆறு மாதங்க ளுக்குள் முடிக்கப்படுவதை நீதித் துறை உறுதி செய்ய வேண்டும். அதனால்தான் தடை உத்தரவை உச்சநீதிமன்றம் விமர்சித்துள் ளது. குறுகிய அரசியல் நோக்கத் திற்காக உழைக்கும் கேரள எதிர்ப்பு முன்னணியின் தலைமை யை உச்ச நீதிமன்றத்தால் அடை யாளம் காண முடியவில்லை போலும். ஆனால், அவர்களை அடையாளம் காண கேரளாவை நேசிக்கும் மக்களுக்கு, உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு உத வும் என தனது முகநூல் பதிவில் பி.ராஜீவ் குறிப்பிட்டுள்ளார்.