districts

img

தேனி அருகே மக்கள் தொடர்பு முகாம்

தேனி, நவ.16- தேனி அருகே நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில்  53 பயனாளிகளுக்கு 11.35 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் வழங்கி னார். தேனி வட்டம், தப்புக்குண்டு கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் தலைமையில் நடைபெற்றது. முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் 53 பயனாளி களுக்கு ரூ.11.35 இலட்சம் மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார் . தேனி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சக்கரவர்த்தி, மாவட்ட  ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இரா.தண்ட பாணி, பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் கி.சிந்து,  வேளாண்மைத்துறை இணை இயக்குநர் செந்தில்குமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் இராஜராஜேஸ்வரி, தப்புக்குண்டு ஊராட்சி மன்றத்தலை வர் பழனிராஜ் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.