தேனி, செப்.13- தேனி வட்டம் காட்டு நாயக்கன்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 1061 பயனாளி களுக்கு ரூ.6.94 கோடி மதிப் பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சி யர் ஆர்.வி.ஷஜீவனா வழங்கினார். பட்டா மாறுதல், ஆத ரவற்ற விதவை ஓய்வூதியத் திட்டம், தேசிய முதியோர் ஓய்வூதியத்திட்டம், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை திட்டம், முத்து லெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம், மக் களை தேடி மருத்துவம், ஆதி திராவிடர் நலத்துறையின் மூலம் விலையில்லா தையல் இயந்திரம், பிற்படுத்தப் பட்டோர் நலத்துறையின் மூலம் விலையில்லா தேய்ப்பு பெட்டிகள், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை யின் மூலம் இடுபொருட்கள் வழங்குதல், தோட்டக் கலைத்துறையின் மூலம் காய்கறி விதைகள், மகளிர் திட்டத்தின் மூலம் நலிவுற்ற வர்கள் தொழில் தொடங்கு வதற்கான கடனுதவிகள், ரூ.5 லட்சம் மதிப்பிலான முத லமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் சார் பில் 1061 பயனாளிகளுக்கு ரூ.6.94 கோடி மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவி கள் வழங்கப்பட்டன.