districts

img

சிபிஎம் தலைவர்கள் மீதான பொய் வழக்கை வாபஸ் பெறக் கோரி போராட்டம்

காரியாபட்டி, மே 11- காரியாபட்டியில் சிபிஎம் தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை காவல்துறையினர் வாபஸ் பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மே 11 வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியினர் மீது காவல்  நிலையத்தில் பொய்யான புகார் கொடுத்துள் ளார். அதன்பேரில், காரியாபட்டி போலீசார் சிபிஎம் வட்டச் செயலாளர் அம்மாசி, வட்டக்குழு உறுப்பினர் குமராண்டி உள்ளிட்டோர் மீது பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனைக் கண்டித்தும், பொய் வழக்கை திரும்பப்பெறக் கோரியும் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காரியாபட்டி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு வட்டக்குழு உறுப்பினர் பி.மலைச்சாமி தலைமையேற்றார். துவக்கி வைத்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முத்துக்குமார் பேசினார். முடிவில் மாவட்ட  செயலாளர் கே.அர்ஜூனன் கண்டன உரையாற்றி னார். மேலும் இதில் வட்டச்செயலாளர் ஏ.அம்மாசி, தாலுகாக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.