districts

‘இயற்கை விவசாயம்’ என்ற பெயரில் தனியார் நிறுவனம் கோடிக்கணக்கில் மோசடி

தஞ்சாவூர், டிச.15 -   இயற்கை விவசாயம் செய்து அதில் விளையும் பொருட்களை கொடுத்தால், அதிக லாபம் கிடைக்கும் என கோடிக்கணக்கில் மோசடி செய்த தனியார் நிறுவனம் மீது நட வடிக்கை எடுக்கக்கோரி, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தஞ்சா வூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.   தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில், திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. அப்போது, தஞ்சையில் இயங்கி வரும், “வாழ வழி வகுக்கும் மக்கள் நல முன்னேற்ற நலச்சங்கம்” தலைவர் நாகராஜன் தலைமை யில் 300க்கும் மேற்பட்டவர்கள் அளித்த மனுவில், “சென்னையை தலைமையிடமாக கொண்ட சி.ஐ.ஆர்., வெல்த் டெவலப்பர்ஸ் பார்ம் இந்தியா என்ற தனியார் நிறுவ னத்தினர், தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, மன்னார் குடி, திருச்சிராப்பள்ளி, நாகர்கோவில் ஆகிய பகுதியில், இயற்கை விவசாயம் செய்து, அந்த உணவுப் பொருளை ஏற்று மதி செய்து அதில் கிடைக்கும் லாபத்தில், மாதத் தவணை யாகவும், ஒரே மொத்த தவணையாகவும் வழங்குவதாகவும்,

ஐந்து ஆண்டுகள் முடிவில் வட்டியும் சேர்த்து தருவதாக கூறி,  பொதுமக்களிடம் 500 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை வசூல்  செய்தனர்.   இந்த பணம் பெற்றுக் கொண்டதற்கான ரசீதும் அளிக்கப் பட்டது. தொடர்ந்து கடந்த 2017ஆம் ஆண்டில் பணம் கட்டி  முடித்த சிலருக்கு மட்டும் முதிர்வுத் தொகை வழங்கப்பட் டது. அதற்கு பிறகு யாருக்கும் பணம் திரும்ப தரவில்லை. இத னால் பாதிக்கப்பட்டவர்கள், அந்த அலுவலகத்தை தொடர்பு  கொண்டு கேட்டபோது பணம் தருவதாக கூறி, கடந்த நான்கு  வருடங்களாக இழுத்தடித்து வருகின்றனர்.  இந்நிறுவனத்தில், தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் சுமார்  10 ஆயிரம் பேர் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்து உள்ளனர். எனவே, இந்த நிறுவனத்தை சேர்ந்த அன்பழகன், அவர்  மனைவி ஜெர்லின் மற்றும் இயக்குநர்கள் பிரபாகரன், ராஜசேக ரன், ஜோதிபாசு, ரதீஸ் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுத்து  பணத்தை மீட்டு தர வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

;