சின்னாளபட்டி, ஆக.22 இழப்பீடு கேட்கும் விவசாயி களைக் காவல்துறை மூலம் மிரட்டும் மின்வாரியம் மிரட்டுவ தாக மக்கள் குற்றம்சாட்டியுள்ள னர். ஆத்தூர் ஒன்றியம் வீ.கூத்தம் பட்டியில் உயர்மின் கோபுரம் அமைக்க இடம் கொடுத்த விவ சாயிகளுக்கு உரிய தொகை வழங் காததால் விவசாயிகள் மின் வாரிய அதிகாரிகளை முற்றுகை யிட்டனர். முற்றுகையிட்ட விவ சாயிகள் காவல்துறை மூலம் மிரட்டப்பட்டனர். விருதுநகரிலிருந்து கோயம் புத்தூருக்கு உயர் மின் கோபு ரம் திண்டுக்கல் மாவட்டம் வழி யாகச் செல்கிறது. இதற்காகத் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் வீரக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட வீ.கூத்தம்பட்டி, தெற்கு மற்றும் வடக்கு மேட்டுப்பட்டி, வண் ணம்பட்டி ஆகிய பகுதியை 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோபுரம் அமைக்க இடம் வழங்கி னர். இவர்களுக்கு மின்வாரியம் உரிய தொகை வழங்க மறுக்கிறது. ஆறு மாதத்திற்கு முன்பு அமைச்சர் ஐ.பெரியசாமியைச் சந்தித்து விவசாயிகள் புகார் செய்தனர். இதையடுத்து சில விவசாயிகளுக்கு மட்டும் குறைந்த தொகை வழங்கப்பட்டது. இந்த நிலையில் வீ.கூத்தம் பட்டிக்கு வந்திருந்த மின்வாரிய அதிகாரிகளை இடம் கொடுத்த விவசாயிகள் முற்றுகையிட்டு நிவா ரணத் தொகையை வழங்க வலி யுறுத்தினர். இதையடுத்து விவ சாயிகள் தங்களை மிரட்டுவதாகச் செம்பட்டி காவல்நிலையத்தில் புகார் செய்து வழக்குப் பதிவு செய்வோம் மின்வாரிய அதிகாரி கள் மிரட்டியுள்ளனர். திமுக ஒன்றியக்குழு உறுப்பி னர் செல்வி காங்கேயன் மின் வாரிய அதிகாரிகளிடம் உரிய நிவா ரணம் வழங்கக் கேட்டதற்கு நிவா ரணம் வழங்க முடியாது. நீதிமன்றம் மூலம் பார்த்துக்கொள்ளுங்கள் என மிரட்டுகின்றனர். இது குறித்து அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் தெரிவிப்போம் என்றார். விவசாயிகளுக்கான இழப் பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். நீண்ட கால மாக இழப்பீடு கோரும் விவசாயி களைக் காவல்துறையை வைத்து மிரட்டக் கூடாது எனத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ராமசாமி, தலைவர் பெருமாள் ஆகியோர் வலியுறுத்தி யுள்ளனர்.