districts

img

4 வழிச்சாலையில் குழாய்கள் அமைக்கும் பணி இந்த மாத இறுதியில் முடிவடையும்: சபாநாயகர் அப்பாவு தகவல்

திருநெல்வேலி ,அக். 11- நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு, நம்பி யாறு, கருமேனியாறு ஆகிய நதிநீர் இணைப்பு திட்டம் 2009-ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சி காலத்தில் கொண்டு வரப் பட்டு ரூ.369 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. கடந்த 10 ஆண்டுக ளாக இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு, பணிகள் மந்த நிலையில் நடந்து வந்தது. தற்போது இந்த திட்டத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டு பணி கள் மும்முரமாக நடந்து  வருகிறது.வருகிற மார்ச் 31- ஆம் தேதிக்குள்  நதிநீர் இணைப்பு திட்டம் நிறை வேற்றப்படும்  என்று சமீபத்தில் நெல்லைக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இந்நிலையில் நெல்லை பொன்னாக்குடி அருகே 4 வழிச்சாலைக்கு மாற்றுப் பாதை அமைக்கப் பட்டு வருகிறது. இதில் தற்காலி கமாக தண்ணீர் செல்லும் வகையில் குழாய் களும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணி களை சபாநாயகர் அப்பாவு மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உள்ளிட்ட அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களி டம் கூறியதாவது:- குழாய்கள் அமைக்கும் பணி பொன்னாக்குடி நான்கு வழிச்சாலை யில் மாற்றுப்பாதை அமைக்கப் பட்டு 1,300 கன அடி தண்ணீர் செல்லும் வகையில் 420 குழாய்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் இந்த மாத இறுதியில் நிறைவு பெற்றுவிடும். இதனைத் தொடர்ந்து சோதனை ஓட்டமாக திட்டத்தின் இறுதிப்பகுதியான எம்.எல்.தேரி வரை தண்ணீர் கொண்டு செல்லப் படும். எம்.எல்.தேரி வரை 80 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டது. இன்னும் ஒருமாதத் தில் இந்த பகுதிக்கான பணி முடிவடைந்து விடும்.

விவசாயி வழக்கு

பொட்டல்விளை பகுதியில் ஒரு விவசாயி வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கும் விரைந்து முடிக்கப்பட்டு பணிகள் தொ டங்கப்படும். மன்னார் புரம், கோட்டைகருங் குளம் ஆகிய பகுதிகளில் பணி கள் மெது வாக நடந்து வருகிறது. கடந்த ஆட்சியில் இந்த பகுதியில் 6 முதல் 8 சதவீத பணிகள்தான் முடிவடைந்திருந்தது. தி.மு.க ஆட்சிக்கு வந்த பின் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு 45  சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளது. முது மொத்தான் மொழியில் 65 சதவீதம் பணிகள் முடிவடைந்து உள்ளன. 3,500 கன அடி கொள்ளளவு கொண்ட இந்த கால்வாயில் இந்த ஆண்டு முதல் கட்டமாக விவசாயிகள் பயன்பெறும் வகையில் 1,300 கன அடி தண்ணீர் கொண்டு செல்லப்படும். இதன் மூலம் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் முழு பலன் பெறாவிட்டாலும், 35 சதவீதத்திற்கு மேல் விவசாய நிலம் பயன் பெறும். இவ்வாறு அவர் கூறினார்.      இந்த ஆய்வின் போது நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, கண் காணிப்பு பொறியாளர்கள் செல்வராஜ், பத்மா,  செயற்பொறி யாளர்கள் பழனிவேல், அண்ணா துரை, திருமலை குமார், ஒப்பந்ததாரர் ஆர்.எஸ்.முருகன் மற்றும் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. உட்பட பலர் கலந்து கொண்டனர்.