districts

img

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வீரவசந்தராயர் மண்டப பகுதியில் தூண்கள் அமைக்கும் பணி தொடக்கம்

மதுரை, மார்ச் 27- உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வந்து செல்கிறார்கள்.  கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி இரவு நடந்த தீ விபத்தில் கோவி லின் கிழக்கு வாசல் ராஜகோபுரம் வழி யாக சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் வீரவசந்தராயர் மண்டபம் முற்றிலும் எரிந்து நாசமானது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பாலக்  கோடு அருகே உள்ள பட்டினம் மலை அடி வாரத்தில் உள்ள கற்களை புனரமைப்பு பணிக்கு பயன்படுத்த அரசு முடிவு செய்  தது. அதன்படி அங்கு கற்கள் வெட்டி எடுக்க  ரூ.6.40 கோடி, மண்டப வடிவமைப்புக்கு ரூ.11.70 கோடி நிதி அரசு ஒதுக்கீடு செய்  தது அங்கு கடந்த 2021-ம் ஆண்டு முதல்  கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு மீனாட்சி  அம்மன் கோவிலுக்கு சொந்தமான வளை யங்குளத்தில் உள்ள கூடல்செங்குளம் பண்ணையில் வைக்கப்பட்டது  அந்த கற்களை தூண்களாக செதுக்கும் பணியை மேற்கொள்ள திருப்பூர் ஸ்பதி வேல்முருகன் என்பவருக்கு  அரசு உரிமம் வழங்கியது. இந்த நிலையில் தீ விபத்து நடந்து 6-ம்  ஆண்டுகளுக்கு பிறகு கோவில் வளா கத்தில் புனரமைப்பு பணி திங்களன்று  துவங்கியது .இதில் மீனாட்சி அம்மன்  கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், மாவட்ட ஆட்சியர் எஸ். அனீஷ் சேகர் மற்றும் மதுரை மாநகராட்சி மேயர் வ.  இந்திராணி, கோவில் அதிகாரிகள் பங்கேற்றார்கள். மார்ச் - 27 ஆம் தேதி துவங்கிய  இந்த பணியானது மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவடையும் எனவும் அதற்கு பிறகு  கும்பாபிஷேகம் நடைபெறும் எனவும்  கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித் துள்ளது.