districts

img

டாஸ்மாக் ஊழியர்கள் மனு கொடுக்கும் இயக்கம்

மதுரை, மார்ச் 10- டாஸ்மாக் ஊழியர்களின்  நீண்ட கால கோரிக்கைகளான பணி நிரந்தரம், காலமுறை ஊதி யத்தை தமிழக அரசும் டாஸ்மாக் நிர்வாகமும் உடனடி யாக நிறைவேற்று வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற உத்த ரவின்படி மதுக்கூடங்களை மூடி, முறைகேடாக வழங்கப்பட்ட பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்திட வேண்டும் என்று வலியுறுத்தி டாஸ்மாக் ஊழி யர்கள் சார்பில் மாவட்ட ஆட்சி யரிடம் மனு கொடுக்கும் போராட் டம் நடைபெற்றது.  மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழனன்று நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு மதுரை மாவட்ட டாஸ் மாக் ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் இரா.லெனின் தலை மை வகித்தார். இதில், மாவட்ட பொதுச் செயலாளர் து.சிவக் குமார், பொருளாளர் வி.செந்தில் குமார் மற்றும் நிர்வாகிகள் மகா லிங்கம், வல்லரசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  திண்டுக்கல் திண்டுக்கல் ஆட்சியர் அலு வலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பி. ராமு தலைமை வகித்தார். மாவட்டப் பொதுச்செயலாளர் சீனிவாசன், மாநிலக்குழு உறுப்பி னர் மா.கோபால், மாவட்ட துணைத் தலைவர்கள் ராஜா மணி, செயலாளர்கள் திருமுரு கன், பி.சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.  சிஐடியு மாவட்ட பொருளா ளர் தனசாமி, மாவட்டத் துணைத் தலைவர் சி.பி.ஜெயசீலன் ஆகி யோர் ஆதரித்துப் பேசினர். மலை யப்பன் நன்றி கூறினார்.