தூத்துக்குடி, ஜூன் 20- தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு பகுதியில் நரிக்குறவர்க ளுக்கு வழங்கப்பட்ட இடத் தை தனி நபர்கள் போலி பட்டா மூலம் ஆக்கிரமிப்பு செய்வதை தடுத்து நிறுத்த கோரி நரிக்குறவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மந்திதோப்பு பகுதியில் நரிக்குறவர்களு க்கு சுமார் மூன்று ஏக்கர் இடம் வழங்கப்பட்டு அதில் ஒரு சிலர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்நிலையில் நரிக்குறவர்கள் தொழில் விஷயமாக பல்வேறு பகுதிகளுக்கு சென்று விடும் நிலையில் நரிக்குறவருக்கு வழங்கப்பட்ட இடங்களை சில தனித் நபர்கள் போலி பட்டா தயாரித்து ஆக்கிர மிப்பு செய்யும் நடவடிக்கை யில் ஈடுபட்டு வருகின்றனர். இதை அடுத்து பாதிக் கப்பட்ட நரிக்குறவர்கள் திங்களன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நரிக்குற வர்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை தனி நபர்கள் போலி பட்டா மூலம் ஆக்கிர மிப்பு செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும், தங்க ளது பெயரில் முறையாக அரசு பட்டா வழங்க வேண் டும் என கோரி மனு அளித்த னர்.