districts

img

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் போராட்டம் வெற்றி

இராமநாதபுரம், அக்.5- சாதி மறுப்பு திருமணம் செய்தவர்கள், விதவைகளுக்கு மனைக்கான நில ஒப்படை ஆணை வைத்துள்ள அனைவருக்கும் நில  ஒப்படை ஆணையை மாற்றி பட்டா வழங்கப்  படும் என வட்டாட்சியர் உறுதி அளித்துள் ளார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் காத்திருப்பு போராட்டம் வெற்றி பெற்றது.  திருவாடானை சமத்துவபுரம் அருகே சாதி மறுப்பு திருமணம் செய்தவர்கள், வித வைகளுக்கு அரசு இலவச வீட்டு மனை வழங்கும் திட்ட அடிப்படையில் 200 பேருக்கும் மேல் மனைக்கான நில ஒப்படை ஆணை வழங்கப்பட்டது.  நிலம் ஒப்படை ஆணை வழங்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்த பிறகும் பயனாளி களுக்கு நிலத்தை அடையாளம் காட்டி அளந்து கொடுக்காமல் காலம் கடத்தி வந்த  நிலையில், இந்த விவகாரத்தில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலையீடு செய்தது. அதன் பின்னரே (லேஅவுட்) வரை படம் போடப்பட்டது.  ஆனால், நிலம் உரியவர்களுக்கு நில ஒப்படை ஆணை வழங்கப்படாததால் தோழர் பி.சீனிவாச ராவ் நினைவு தினத்தை யொட்டி பயனாளிகள் அனைவருக்கும் நிலத்தை அளவீடு செய்து அடையாளம் காட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி திரு வாடானை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வியாழனன்று காத்திருக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில், வட்டாட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், நில ஒப்படை ஆணை வைத்துள்ள அனை வருக்கும் நிலத்தை அளவீடு செய்து அடை யாளம் காட்டுவதுடன் நில ஒப்படை ஆணை யை மாற்றி பட்டா வழங்கப்படும் என உறுதி அளித்தார்.  பேச்சுவார்த்தையில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் நா.கலையரசன், மாவட்  டக் குழு உறுப்பினர்கள் எ.நாகநாதன் ஆர். சேதுராமன், சிபிஎம் தாலுகா செயலாளர் கே.ஜெயகாந்தன், விவசாயத் தொழிலாளர் சங்க தாலுகா தலைவர் அருள்சாமி, வாலி பர் சங்க தாலுகா செயலாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.