districts

img

கீழப்பூங்குடியில் மெட்டல் சாலை, அடிப்படை வசதிகள் நிறைவேற்றம் ஊராட்சி மன்ற தலைவி சண்முகவள்ளி சிவப்பிரகாசம் தகவல்

சிவகங்கை, ஜன.13- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றி யம் கீழப்பூங்குடி ஊராட்சி யில் 14 மற்றும் 15 ஆவது மானியக்குழு நிதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்த ப்பட்டுள்ளதாக ஊராட்சி மன்ற தலைவி சண்முகவள்ளி சிவப்பிரகாசம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நமது செய்தியாளரிடம் கூறியதாவது: கீழப்பூங்குடி ஊராட்சி வீரப்பட்டி கிரா மத்தில் தெருக்குழாய், குளியல் தொட்டி  அமைக்கப்பட்டுள்ளது. வீரபட்டி யாதவ  தெருவில் குளியல் தொட்டியும், ஆழ்குழாய் கிணறும் அமைக்கப்பட்டுள்ளது. கீழப்பூங் குடி மாரியம்மன் கோவில் ஊரணியை அடுத்த  விவசாய கட்டிடம் அருகே ஆழ்குழாய் கிணறு  அமைக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் தெரு வில் போர்வெல் அமைக்கப்பட்டுள்ளது.  பேரணிபட்டி,செம்பினியான்பட்டியில் குளியல் தொட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. பேரணிபட்டியில் ஆரம்பப் பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக் கப்பட்டிருக்கிறது. குருந்தம் பட்டியில் 26 வீடுகளுக்கு உறிஞ்சி குழி அமைக்கப்பட்டி ருக்கிறது. குறிஞ்சன்பட்டியில் மெட்டல் சாலை அமைக்கப் பட்டிருக்கிறது.  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத் தில் 800 பேருக்கு வேலை அட்டை வழங்கப்பட்டுள்ளது. 500 பேர் 100 நாட்கள் வேலை செய்துள்ளனர். துணைத்தலைவர் உமா ரேவதி, ஊராட்சி உறுப்பினர்கள் தமிழரசி, முருகன், பானுமதி, பாண்டிமீனாள், உமாரேவதி, சுதந்திர தேவி, கண்ணன், ஆறுமுகம், ஊராட்சி மன்ற  செயலாளர் மாரிமுத்து ஆகியோர் சிறப்புடன்  செயல்பட்டு வருகின்றனர்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.