தூத்துக்குடி, அக்.19- தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகே உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர் சங்கம் சார்பில் அமைப்பு தினத்தை முன் னிட்டு கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இதற்கு தமிழ்நாடு உதவி வேளாண் மை அலுவலர் சங்க மாவட்ட தலை வர் ஜெபதுரை தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் கோபால கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகன், அமைச்சுப் பணி யாளர் சங்க மாவட்ட செயலாளர் தினேஷ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் கணேசன், வட்டச் செயலாளர் தவமணி பீட்டர், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் பிரான்சிஸ், மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட இணைச்செயலாளர் பால கிருஷ்ணன், மாவட்ட அமைப்பு செயலா ளர் மாரிச்செல்வம், மாவட்ட தணிக்கை யாளர் மணிகண்டன் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைப் பொதுச் செயலா ளர் என்.வெங்கடேசன் நிறைவுறை யாற்றினார். நிறைவாக வேளாண் அலுவலர் முத்துக்குமார் காளிராஜ் நன்றி உரையாற்றினார்.