districts

img

சித்தையன்கோட்டை அருகே தனியார் பேருந்து-லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலி

சின்னாளப்பட்டி,செப்.16- சென்னையில் இருந்து தனி யார் சொகுசு பேருந்து ஒன்று  40 பயணிகளுடன் கம்பம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்தப் பேருந்தை கம்பம் அனுமந்த பட்டியைச் சேர்ந்த ஓட்டுநர் மணி என்பவர் ஓட்டிக்கொண்டு வந்து ள்ளார். திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை  போடி காமன்வாடி அருகே வெள்ளி யன்று காலை பேருந்து வந்து கொண்டிருந்தபோது திருவில்லிபுத்தூரில் இருந்து கோயம்புத்தூருக்கு செங்கல் ஏற்றி சென்ற லாரி பேருந்து மீது மோதியது. இதில் பேருந்து  ஓட்டுநர் உட்பட 10 பேர்காயமடைந்தனர். பலியான லாரி ஓட்டு நர் மாடசாமி (47)தென்காசி இடக்கால் பகுதியை சேர்ந்த வர். செம்பட்டி போலீசார் மற்றும் ஆத்தூர் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

;