districts

img

நிதிநிலை அறிக்கையில் கோரிக்கைகள் குறித்த அறிவிப்பு இல்லை அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மதுரை, மார்ச் 21-  தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கையில் அரசு ஊழியர்-ஆசிரியர்கள் தொடர்  பான கோரிக்கைகள் குறித்த  அறிவிப்பு எதுவும் இடம்பெற வில்லை. இதனைக் கண்டித்து செவ்வாயன்று தமிழ்நாடு அரசு  ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்றன. மதுரை மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவல கங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தல்லாகுளம் பொதுப்பணித்துறை அலு வலகத்தில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் பொதுச்செயலாளர் ஆ.செல்வம் கண்டன உரை யாற்றினார். மாவட்டச்செய லாளர் க.நீதிராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் இரா.  தமிழ், மாவட்ட பொருளாளர் சந்திரபோஸ் மற்றும் மாவட்ட  நிர்வாகிகள் கலந்து கொண்ட னர். உசிலம்பட்டி, திருமங்க லம், வாடிப்பட்டி மற்றும் மதுரை மாநகராட்சி என 49 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மாவட்ட தலைவர் ஜெ. மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மானாமதுரை  மானாமதுரை வட்டக் கிளை  சார்பாக மானாமதுரை ஊரா ட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கிளைத் தலைவர் சிவகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செய லாளர் ராதாகிருஷ்ணன் நிறைவுரையாற்றினார். 

தேனி 

தேனி ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம், தேனி நெடுஞ்சாலைத்துறை அலு வலகம் ,தேனி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை ,பெரியகுளம் நெடுஞ்சாலைத் துறை அலுவலகம்,கம்பம் ,பாளையம் ,சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய அலுவல கங்கள் ஆகிய 7 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தேனி மாவட்ட தலைவர் பி.பேயத்தேவன் ,மாவட்டச் செயலாளர் தாஜு தீன் ,மாவட்ட பொருளாளர் முத்துக்குமார் ,மாவட்ட நிர்வாகி கள் ராமகிருஷ்ணன் ,ராஜேந்தி ரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

நத்தம்

நத்தம் வட்டாட்சியர் அலு வலகத்தில் மாவட்ட துணை  தலைவர் சுகந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  நத்தம் பேரூராட்சி அலு வலகத்தில் வட்ட தலைவர் பச்சைமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அழகர்சாமி கண்டன உரையாற்றினார்.