திருநெல்வேலி, மே 19- நெல்லை மாவட்டம் அடைமிதிப் பான் குளத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர். 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாறைகளுக்குள் சிக்கிய மேலும் ஒருவரை மீட்கும் பணி வியாழக்கிழமை 5 ஆவது நாளாக நடந்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை மீட்பு பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நிருபர்களிடம் கூறி யதாவது: உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவோர் தெரிவித்த தகவலின் அடிப்படையில், குவாரியில் சிக்கியுள்ள ஒருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. அவர்கள் சொல்வதன் அடிப்படை யில் பார்க்கும்போது சுமார் 100 டன் எடையுள்ள பாறைகளுக்கு அடியில் சிக்கி இருக்கலாம் என கருதப்படு கிறது. எனவே அந்த பாறைகளை உடைத்து அப்புறப்படுத்தி அதன் பின்னர் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த குவாரி விபத்து தொடர்பாக கனிம வளத்துறை உதவி இயக்கு னர் வினோத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதில் தொடர்பு டைய அனைத்து அதிகாரிகளும் விரை வில் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். குவாரியில் இருந்து வெளியே கல் கொண்டு செல்லும் போக்குவரத்துக் கான உரிமம் கடந்த ஆண்டு மார்ச் மாதமே ரத்து செய்யப்பட்டிருந்தது. விபத்து நடந்து அடுத்த நாளான 15 ஆம் தேதியே குவாரிக்கான குத் தகை தற்காலிகமாக ரத்து செய்யப் பட்டுள்ளது. மேலும் தாலுகா வாரி யாக குழு அமைக்கப்பட்டு ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது வரை முறைகேடாக செயல்பட்ட குவாரிகளுக்கு சுமார் 20 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள சுமார் 55 குவாரி களை ஆய்வு செய்யும் பணி மேற் கொள்ளப்பட்டு வருகிறது என்றார். மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் சரவணன் கூறியதாவது: இந்த குவாரி விபத்து தொடர்பாக நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பி ரண்டு ரஜத் சதுர்வேதி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசா ரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 2 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர். மேலும் தலைமறைவாகி உள்ள குவாரி உரிமையாளர்களை தேடி வருகிறோம். தொடர்ந்து குவாரி உரிமையாளர் செல்வராஜ் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அடுத்த தாக அவரது சொத்துக்களை முடக்க நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ ருக்கு சொந்தமான திசையன்விளை யில் உள்ள அவரது வீடு மற்றும் அலு வலகம் ஆகியவற்றில் சோதனை நடை பெற்று வருகின்றது. இதில் குற்றவாளி கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.