இராமநாதபுரம்,ஆக.6- இராமநாதபுரம் நாடாளு மன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஏடிஐபி ( ADIP) மெகா கேம்ப் நடத்துதல் தொடர்பாக இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரம ளித்தல் துறை அமைச்சர் டாக்டர் விரேந்திர குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தார். அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: இராம நாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி கள் பின் தங்கிய பகுதிகளா கவும் தொழில் வாய்ப்புகள் போதிய அளவில் இல்லாத பகுதிகளாகவும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக் கள் அதிகம் உள்ள பகுதி களாகவும் உள்ளது. எனவே, ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகை யில் இராமநாதபுரம் நாடாளு மன்ற தொகுதிக்குட்பட்ட பகு திகளில் ஏடிஐபி (ADIP) மெகா கேம்ப் நடத்துவ தற்கும், பொதுமக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்குவதற்கும் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அதிகமான மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் வாழக்கூடிய பகுதி யாக இராமநாதபுரம் நாடா ளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகள் இருப்பதினால், இராமநாதபுரம் மாவட் டத்தை ராஷ்ட்ரிய வயோஸ்ரீ யோஜனா திட்டத்திற்கு பரிந்துரைக்க வேண்டும். மேலும் இத்திட்டத்திற்கான முகாம்களை நடத்தி, பய னாளிகளை கண்டறிந்து, அவர்களுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்க சம்பந்தப்பட்ட அலுவலர் களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.