districts

img

சிபிஎம் விழுப்புரம் மாவட்டச் செயலாளராக என்.சுப்பிரமணியன் தேர்வு

விழுப்புரம்,டிச.19- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்ட  23 ஆவது மாவட்ட மாநாடு விழுப்புரத்தில் டிசம்பர் 18, 19 ஆகிய தேதிகளில்  நடைபெற்றது. மாநாட்டை கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் துவக்கி வைத்து  உரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். நூர்முகம்மது நிறைவுரை யாற்றினார்.  மாநாட்டில் கட்சி யின் மாவட்டச் செயலாள ராக என்.சுப்பிரமணியன்  தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக பி.குமார், வி.ராதாகிருஷ்ணன், எஸ். கீதா, எஸ்.முத்துக்குமரன், ஏ. சங்கரன், ஜி.ராஜேந்திரன், ஆர்.மூர்த்தி, எஸ்.வேல்மாறன், சே.அறிவழ கன், ஆர்.டி.முருகன் ஆகி யோரும், 35 பேர் கொண்ட மாவட்டக்குழுவும்  தேர்வு செய்யப்பட்டது.  விழுப்புரம் மாவட்டத்தை மழைவெள்ளம் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;