குமரி மாவட்டம் கொல்லங்கோடு நகராட்சிகுட்பட்ட பகுதிநேர கொல்லங்கோடு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி முழு நேர மருத்துவமனையாக மாற்றி நவீன வசதிகளுடன் செயல்படுத்திட கேட்டும், நெடுவிளை பகுதியில் அமைந்துள்ள நட்டாலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பத்து படுக்கையுடன் கூடிய மருத்துவமனையாக தரம் உயர்த்துவதோடு இரவு நேர மருத்துவரையும் பணியில் அமர்த்த கேட்டும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாலிபர் சங்க கொல்லங்கோடு மற்றும் நல்லூர் வட்டார குழுக்கள் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கபட்டது.