மதுரை, செப்.15- மதுரை அண்ணாநகர் மௌ லானா சாகிப் தெருவைச் சேர்ந்த முகமது ஜமிலுதீன் ( வயது 86) செப்டம்பர் 14 அன்று காலமா னார். இவர் கூட்டுறவு துறையில் துணை பதிவாளராக பணியாற்றி யவர். செம்மலர் மற்றும் பல்வேறு இதழ்களில் சிறுகதை கள் எழுதியுள்ளார்.அகில இந்திய வானொலி,பொதிகை தொலைக்காட்சியில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியவர். தீக்கதிர் நாளிதழ் மூத்த துணையாசிரியரும் முன்னாள் துணை ஆட்சியருமான மறைந்த தலைவர் எப்.எம்.குத்புதீன் அவர்களின் இளைய சகோதரர் ஆவார். அன்னாரது மறைவுச் செய்தியறிந்து பலர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மறைந்த முகமது ஜமிலுதீனுக்கு மல்லிகா என்ற மனைவியும் ரபீக், பக்ருதீன் என்ற 2 மகன்களும் உள்ளனர். அவரது இறுதி நிகழ்ச்சி முனிச்சாலை நூர்தீன் பள்ளிவாசலில் செப்டம்பர் 16 சனிக்கிழமையன்று மதியம் 12 மணியளவில் நடைபெறுகிறது.