districts

img

காளையார்கோவில் பஞ்சாலையை திறக்க மறுக்கும் மோடி அரசு

சிவகங்கை, மே 9- சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள  காளீஸ்வரா அரசு பஞ்சாலை யில் உற்பத்தியை தொடங்க வலி யுறுத்தி காளையார் கோவிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி சார்பில் காளையார் கோவில் ஒன்றியச் செயலாளர் தென்னரசு தலைமையில் போராட்டம் நடைபெற்றது. மூத்த தோழர்கள் அண்ணாத் துரை, சாத்தப்பன், மாவட்டச் செய லாளர் தண்டியப்பன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆறு முகம், முத்துராமலிங்க பூபதி, மோகன், சேதுராமன், மாவட்டக்  குழு உறுப்பினர்கள் மெய்யப்  பன், விசுவநாதன், இளையான் குடி ஒன்றியச் செயலாளர் ராஜீவ், சீனிவாசன், சித்ரா, திருமாறன், முத்துராஜா, நரசிங்கம், வெள்ளைச்சாமி, கொல்லங்குடி திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய அரசின் கட்டுப்பாட் டில் உள்ள இந்த ஆலையில் 800 தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். கொரோனா வைக் காரணம் காட்டி 2019-ஆம் ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி ஆலை பூட்டப்பட்டது. கொரோனா காலம் முடிந்த  பின்பும் லாபகரமாக இயங்கி வந்த ஆலையை மோடி அரசு திறக்க மறுத்து வருகிறது. இதனால் 800 தொழிலாளர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடி வருகின்றன. ஆலையை உட னடியாகத் திறந்து தொழிலா ளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. கொரோனா-வை காரணம் காட்டி பூட்டிய இந்த ஆலையை கார்ப்பரேட்டுகளுக்கு விலை பேசுகிறாரா மோடி என்ற கேள்வி யையும் எழுப்புகின்றனர் காளை யார்கோவில் மக்கள்.