districts

img

நந்தவனங்களால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டது

சிவகங்கை, மே 13- கோவில்களில் இருந்த  நந்தவனங்கள் மூலம் சுற்  றுச்சூழல் பாதுகாக்கப்பட் டது. பல்லுயிர் சார்ந்த உயி ரினங்கள் வாழும் பகுதியாக  கோவில்கள் விளங்குகின் றன என்றார் அமைச்சர் மெய்  யநாதன். இந்தியப் பண்பாடு மரபு, கோவில் கட்டடக்கலை போன்றவற்றை மீட்டெடுத்து இந்த தலைமுறைக்கு கொண்டு செல்வது குறித்த  கருத்தரங்கம் காரைக்குடி  அழகப்பா பல்கலைக்கழ கத்தில் நடைபெற்றது. நிகழ்வில் பங்கேற்ற தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், “அடுத்த தலை முறைக்கு நம்மை கொண்டு செல்வது நமது கலாச்சாரம் தான். உலகிற்கே மூத்தகுடி தமிழ்க்குடி. ஒட்டு மொத்த  உலகத்திற்கே பயனளிக்க கூடிய அரிய கருத்துகளை நமது கலாச்சாரம் கொடுத்து உள்ளது. அதற்கு முக்கியக்  காரணம் நமது முன்னோர் கள் அளித்த அரிய பங்க ளிப்புதான். இந்து அறநிலை யத் துறை சார்பில் தமிழ்  நாட்டில் 45,000 கோவில்கள் உள்ளன. கோவில் இருக்கு மிடத்தில் நந்தவனங்களும் இருந்தன.

இதன் வழியாக  சுற்றுச்சூழல் பாதுகாக்கப்  பட்டது. பல்லுயிர் சார்ந்த உயிரினங்கள் வாழும் பகுதி யாக கோவில்கள் விளங்கு கின்றன. இவைகளோடு ஆக்  சிசனை அளிக்க கூடிய ஆல மரம், அரசமரம், மூங்கில்  மரம் ஆகிய மரங்கள் பெரும்  பாலான கோவில்களில் உள்  ளன என்றார். விழாவிற்கு தலைமை வகித்துப் பேசிய பல்கலை. துணைவேந்த ரவி, “ நாம்  நமது பழமையை மறக்கா மால் தொடர்ந்து கலாச்சா ரத்தை பின்பற்ற வேண்டு மென்றார்”.  விழாவில் அழகப்பா பல்கலைக்கழக புல முதன் மையர்கள் தனுஷ்கோடி,  சுஜாதா மாலினி, தொலை நிலைக்கல்வி இயக்குநர் குருமல்லேஷ் பிரபு, தேர்வா ணையர் கண்ணபிரான், தொலை நிலைக்கல்வியி யல் துறை  சிவக்குமார், கீழடி  அகழ்வாய்வு ஆர்ய்ச்சியா ளர் மர்நாத் ராமகிருஷணன், பதிவாளர் ராஜமோகன் ஆகி யோர் பேசினர். மூன்று நாள் பண்ணாட்டு கருத்தரங்கில் 80 ஆய்வு கட்டுரைகள் சமர்ப் பிக்கப்பட்டன.  இந்தக் கருத்தரங்கை காரைக்குடி அழகப்பா பல்க லைக்கழக தொலைநிலை கல்வி இயக்க கல்வியில் துறை-வரலாற்றுத் துறை இணைந்து நடத்தின.