districts

img

கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி, மார்ச் 30- பால் கொள்முதல் விலை யை லிட்டருக்கு ரூ.7 உயர்த்த  வேண்டும். மாட்டு தீவனங் கள் 50 சதவீத மானியத்தில்  வழங்க வேண்டும். உற்பத்தி யாளர்களிடம் பால் முழுவ தும் கொள்முதல் செய்ய வேண்டும். சத்துணவு திட்  டத்தில் மாணவ -மாணவி யருக்கு பால் வழங்க வேண்  டும் என்பன உள்ளிட்ட கோரி க்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியா ளர் சங்கத்தின் சார்பில் போடி  அருகே சில்லமரத்துப்பட்டி யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்  றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்  கத்தின் தேனி மாவட்ட செய லாளர் எச்.ஜெயக்குமார் ,மாவட்ட பொருளாளர் பி. கிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர் .விவ சாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கே.ராஜப்பன் ,மாவட்ட தலைவர் எஸ்.கே. பாண்டியன் ,விவசாய தொழி லாளர் சங்க மாவட்ட செயலா ளர் எல்.ஆர்.சங்கரசுப்பு ,சங்  கத்தின் தேனி மாவட்ட தலை வர் கே.செல்வராஜ் ,சங்க நிர்வாகிகள் சிலமலை ஆர்.மனோகரன், ராசிங்காபுரம் மொக்கை மற்றும் வாலிபர்  சங்க மாவட்ட செயலாளர் சி.முனீஸ்வரன் ,தங்க பாண்டி உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.